இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 மே, 2024

கிரஹங்களும் அதன் மரங்களும்

 பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம், வெண், தேக்கு, வேங்கை மரம், வாதநாராயண மரம், எட்டி மரம், புங்க மரம், பலா மரம், பனைமரம், செந்தாமரை, பாலைவன முட்செடிகள், புதர்கள், மரங்கள் போன்றவை அனைத்தும் சூரியன் குறிக்கும் தாவரங்கள் ஆகும்.

சந்திரன்
நாவல் மரம், மந்தாரை, நாகலிங்க மரம், அத்தி மரம், தென்னை மரம், கருங்காலி, சிறுநாகப்பூ, பாக்குமரம், கோதுமை, நெல், பழ மரங்கள், இலங்குறுத்துகள், தேயிலை, காப்பி, முட்டைகோஸ், கிழங்கு, காளான், கரும்பு, பூசணி, பார்லி, புல்வகைகள், அனைத்து பூஞ்செடிகள், வெள்ளரி, சங்குப்பூ, உணவு சம்பந்தமான அனைத்து விவசாய பயிர்களும் சந்திரன் சார்ந்தவை.
செவ்வாய்
கருங்காலி, வேப்பமரம், நீர் கடம்பை, வில்வம், புரசு, கொடுக்காய்ப்புளி மரம், வன்னி மரம், கருவேல மரம், சீத்தாப் பழ மரம், ஜாதிக்காய், மலை மற்றும் பாறைகள் உள்ள இடங்களில் வளரும் மரங்கள், கசப்பு சுவை தரும் மரங்கள், பூண்டு, வேர்க்கடலை, கடுகு, வெல்லம், தடினமான நெல்வகைகள், சிவப்பு நிற தானிய செடி-மர வகைகள் போன்றவை
செவ்வாய் குறிப்பிடும் தாவரங்கள் ஆகும்.
புதன்
புன்னை மரம், முசுக்கொட்டை, இலந்தை மரம், பலா மரம், பூவரச மரம், பனைமரம், தங்க அரளி, செஞ்சந்தனம், மஞ்சள், பூந்தோட்டம், செடி கொடிகள், துளசி போன்ற பவித்திரமான செடிகள் நன்செய் புன்செய் மற்றும் அனைத்து பச்சை இலை உடைய தாவரங்களும் புதனுக்குரியவை.
குரு
மலைவேம்பு, மூங்கில், மரம், நெல்லி, சிம்சுபா, மரம், பூவன் மரம், தூங்குமூஞ்சி மரம், குங்கிலியம், சுந்தரவேம்பு, கள்ளி, மந்தாரை, கடல் அருகில் வளரும் தாவரங்கள், அடர்த்தியான வனப்பகுதி மரங்கள், ஆன்மீகம் சம்பந்தமான மரம் செடிகள், மஞ்சள், பூக்கள், பழமரம், மருந்து சார்ந்த மரங்கள், அனைத்து விதைகள் மூலிகை தாவரம், ரப்பர் மரம், தாமரை நீரில் வளரும் பூக்கள் போன்றவை அனைத்தையும் குரு குறிப்பிடுவார்.
சுக்கிரன்
அத்திமரம், மஞ்சள், கடம்பு, விளாமரம், நந்தியாவட்டை, பலா மரம், வாகை, ருத்ராட்ச மரம், வஞ்சி மரம், சந்தன மரம், எலுமிச்சை மரம், கால்நடைகள் மேயும் புல்வெளிகள், வயல்கள், வாசனை திரவியம் தரும் மரங்கள், இனிப்பான பழங்கள் தரும் மரங்கள், ரப்பர், பருத்தி, தேயிலை, மல்லிகை, மசாலா தாவரம், ஆப்பிள் மரம், பட்டுப் புழு உண்ணும் இலைகள், காய்கறி, ஊறுகாய் மற்றும் பழக்கூழ் தயாரிக்க உதவும் தாவரங்கள், புளிப்பும் இனிப்பும் கலந்த புளியமரம், போன்ற மரங்கள் ஆகிய அனைத்தையும் சுக்கிரன் குறிப்பார்.
சனி
அரசமரம், ஆலமரம், நொச்சி, மகிழமரம், பூ மருது, கோங்கு, தேக்கு, வேம்பு, குள்மொஹார், செம்மரம், சேராங்கொட்டை, எண்ணெய் தரும் மரங்கள், கட்டட வேலைக்கு உதவும் மரங்கள், கடுமை தன்மை உடைய மரங்கள், வாழை, உருளைக்கிழங்கு, பார்லி, குளிரும் இறுக்கமுடைய மரங்கள், புன்செய்நிலம் வாயுவை உண்டாக்கும் காய்கறிகள், பெரிய குழிகள் தேவைப்படும் மரங்கள் போன்றவை சனியின் ஆதிக்கத்தில் வளர்பவை.
ராகு
செங்கருங்காலி, எருக்கு, ஆனைக் குன்றிமணி, மருது, புளியமரம், மஞ்சள், கொன்றை, மந்தாரை, கடம்பு, பரம்பை மரம், பெரிய வனத்தில் உள்ள மரங்கள், காற்றை உருவாக்கும் பெரிய விருட்சங்கள், போதை தரும் தாவரங்கள், விஷச் செடிகள், மாந்திரீகத்திற்கு உதவும் சில செடிகள் போன்றவை ராகுவுக்குரிய தாவரங்கள் ஆகும்.
கேது
காஞ்சிரை, மகிழமரம், வாதாங்கொட்டை, நண்டாஞ்சு, ஆல மரம், முசில மரம், இலுப்பை, பவளமல்லி மரம், பெருமரம், செண்பகமரம், ஆச்சா மரம், கொள்ளுசெடி, செவ்வந்தி செடி, மந்திரீக தாவரங்கள், வேர்கள், உலர்ந்த புல் மூலிகை செடிகள், ஆலமர விழுது, கொடிகள் முட்செடிகள் போன்றவை கேதுவின் தாவரங்களாகும்.
உங்களுடைய யோக கிரகம் வலுவாக இருக்கும்போது. அதற்கான வாழ்கை, தொழிலுக்குரிய உபகரணம் வேற்றி தரும் 👆👆👆

சனி, 12 ஆகஸ்ட், 2023

ஜோதிடத்தில் 12 கட்டம் 9 கிரகம் வைத்து எப்படி பலன் சொல்வது !

 


முதல் வீடு : 

இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம். அவர் உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.


இரண்டாவது வீடு : 
இது குடும்பத்தைக் குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை, Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எதையும் குறைவாகவும், தாமதமாகவும் கொடுப்பார். குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?

மூன்றாம் வீடு : 
இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இந்த வீட்டில் கேது இருப்பாரேயாகில் அவர் கலகங்களை விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும் நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக் "கலியுக நாரதர்" எனவும் கூறலாம். உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.

நான்காம் வீடு :
 இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார் என்க் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில் செவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து , ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும் வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும் எனக் கூறலாம். என்ன புரிகிறதா?

5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.

6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.

7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள். சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.

8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.
9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.

10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.

11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.

12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.

நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்தைக் கடந்தவர்கள் "பிருஹத் ஜாதகம்", "பலதீபிகை", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஜோதிட அறிவு விருத்தியாகும். 

புதன், 9 ஆகஸ்ட், 2023

12 பாவங்கள் காரகத்துவ பலன்கள்


1 முதல் 12 பாவம் வரை காரகத்துவம்
முதல் பாவம்
1, இது லக்னம் எனறும், ஜென்ம லக்னம் எAறும் அழைக்கபடும். இதன் மூலம்
சாதகனின் உயிர், தேகம், சிரசு, குணம், நிறம், உருவம், ஆகியன பற்றி
அறியலாம்
இரண்டாம் பாவம்
2, இது குடும்ப ஸ்தானம் வாக்கு ஸ்தானம் தனஸ்தானம் என அழைக்கப்படும்.
இதன் மூலம் சாதகனின் வசதி, பணவசதி, கல்வி, பேச்சு, உணவு, வலதுகண்,
முகம், குடும்பம், சஸ்திரஞானம், பல வரிசை, கடித வரவுகள், பொன்
ஆபரணங்கள், எதிர்பாரா யோகங்கள்.
முன்றாம் பாவம்
3, இது தைரிய வீரிய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானம், என
அழைக்கப்படும.f இதன் மூலம் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் சாதகர்
வீரம் உள்ளவரா, கோழையா, எனபதையும் வலது காது, மார்பு, இரக்க சுபாவம்,
சங்கிதஞானம், முனனோர் கடன், மதபேதம், கனவுகள், ஆகியன பற்றி அரியலாம்.
நான்காம் பாவம்
4, இது தாயார் ஸ்தானம் சுக வாகன ஸ்தானம் என அனழக்கப்படும். இதன்
மூலம் தாயாரின் உடல்நிலை சாதகனுக்கு வாழ்வில் கிடைக்கும் சுகங்கள், இல்லற
சுகம,f மோட்டார் ஸ்கூட்டர், போன்ற வாகன சுகம், வீடு, நிலம், அனுபவித்தல்
கல்விநிலை, பசு, போன்ற உயிரின வளாப்பு இருதயம் உறவினர், நண்பர்கள்,
துக்கம், புதையல், ஏரி, கிணறு, தோப்பு, மருமகன், சம்பந்தபட்ட விசயங்களை
அறியலாம் இது உடலில் மார்பை குறிக்கும்.
ஐந்தாம் பாவம்
5, இது பஞ்சம ஸ்தானம் புத்திர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம்
யோகஸ்தானம், கீaத்தி பிரதாப ஸ்தானம் என்றாலும் அழைக்கபடும்.
இதன் மூலம் ஒருவரின் குண இயல்புகள், ஆஸ்திகரா, நாஸ்திகரா,
குழந்தைபாக்கியம,f வயிற்றுக்கோளாறுகள,fபிரபுத்துவம்,தாயமாமன், மந்திரஉபதேசம்,
யோக அப்பியாசம், சீட்டு சொக்கட்டான், இவற்றால் ஏற்படும். லாபம்
வணங்கவேண்டிய தெய்வம் தெய்வ அனுக்கிரகம், ஞுaல் நாவல் எழுதுதல், வேதம்
ஓதுதல், அறிவுத்திறன், ஆகியவற்றை அறியலாம். உடலில் வயிற்றை குறிக்கும்.
ஆறாம் பாவம்
6, சத்ரு ஸ்தானம், ருணகள சத்துரு, ஸ்தானம் என அழைக்கப்படும். இதன் மூலம்
சாதகருக்கு ஏற்படும் நோய், கடன், எதிரிகள், கெட்ட சம்பவங்கள், கோர்ட்,
வழக்குகள், மறதி, பசி, தாகம், விபத்து, சிறைபடுதல், கிரிமினல் விவகாரம், திருடு
கொடுத்தல், அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அடிவையிற்றை குறிக்கும்.
ஏழாம் பாவம்
, சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம் போகஸ்தானம் என அழைக்கப்படும் இதன்
மூலமாக காமம், போகம், நாபிக்கு கீழ் உள்ள பகுதி, ஆண் சாதகமாயின்
மனைவியைப் பற்றியும், பெண் சாதகமாயின் கணவனைப் பற்றியும், திருமணம்
இல்லற வாழ்வின் ஏற்றத்தாழ்வ,< யாத்திரை, கூட்டுத்தொழில், முதலியவற்றை
அறியலாம். உடம்பில் இடைப் பகுதியை குறிக்கும்.
எட்டாம் பாவம்
8, அஸ்டம ஸ்தானம், அவமான ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், எதிர்பாரா தனலாப
ஸ்தானம், என்றெல்லாம் அழைக்கப்படும். இதன் மூலம் சாதகரின் ஆயுள் காலம்,
அவமானங்கள், கண்டங்கள், லாட்டரி, புதையல், போன்ற எதிர்பாராமல் கிடைக்கும்
தன லாபங்கள். பிறப்பு உருப்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடிமை, மற்றும்
அகதியாய் இருக்கும் நிலைமை, எய்ட்ஸ்நோய், விடி, பெண்கள் சாதகத்தில் எட்டாம்
இடம் மாங்கல்யஸ்தானம் எனப்படும். விவாகாரத்து, சோம்பேறித்தனம், ஜீவன்களை
சித்திரவதை செய்தல் கடனால் கவலை துர்மரணம் சிறைத்தண்டனை ஆகியவற்றை
குறிக்கும் உடல் உருப்பில் மாமஸ்தானத்தை பிறப்பு உருப்பை குறிக்கும்.
ஒன்பதாம் பாவம்
9, பிதுர் பாக்கிய ஸ்தானம,f பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றேல்லாம்
அழைக்கப்படும். இதன் மூலம் தகப்பனார் நிலை, சாதகரின் யோகம், பூர்வ
புண்ணியம் சொத்துக்கள், அதாவது தந்தை வழி சொத்து, வேள்வி, தேவாலைய
பிரதிஷ்டை, கப்பல் யாத்திரை, சாஸ்திர விவேகம், நீண்ட பிரயாணம், தீaத்த ஸ்தல
யாத்திரை, குதிரை, யானை, கறவை மாடுகள், குரு கோவில், திருப்பணீ,
அட்டமசித்து, ஆகியன பற்றி அறியலாம். உடல் உருப்பில் தொடைகளை குறிக்கும்.
பத்தாம் பாவம்
10, கர்மஸ்தானம், தொழில்ஸ்தானம், என அழைக்கப்படும். இதன் மூலம் சாதகரின்
தொழில், கர்மம், அதிகாரம், யோகம், யாகம், போஜனருசி தகப்பனின் செய்பாவம்
ஒழித்தல், புகழ், அதிகாரம், அரசாங்க உத்தியோகம், மந்திர உச்சாடனம், பற்றி
அறியலாம். உடம்பில் முழங்கால்களை குறிக்கும்.
பதினொன்றாவது பாவம்
11, லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், என்று அழைக்கப்படும். இதன மூலம்
தொழிலாலும், பிற வழிகளாலும் ஏற்படும் லாபங்கள். மூத்த சகோதர,
சகோதரிகள், இடது காது, கணுக்கால், பொருளIட்டல், சொத்துகள் அடைதல், கடித
லாபங்கள், கடல் பிரயானம், பற்றி அறியலாம்.
பனிரென்டாவது பாவம்
12, விரய ஸ்தானம், அயன சயன, போக பாக்கிய ஸ்தானம், என அழைக்கப்படும்.
இதன் மூலம் செலவினங்கள், நட்டங்கள், உணவு, துaக்கம், போகம், உடல் உறவு,
இடது கண், மறுபிறவி, மோட்சம், தற்கொலை, ராஜ துரோகம், சாதி மாறுதல்,
அந்நிய தேசவாசம், வறுமை, உடல் உருப்பில் பாதங்கள்.
26

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...